web log free
October 19, 2025

மின்வெட்டு முடிவுக்கு வரும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் 5ஆம் திகதியுடன் மின்வெட்டு நிறுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
 
மார்ச் மாத இறுதிக்குள் போக்குவரத்து நெருக்கடி நீங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
ரயில் மற்றும் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நீக்கி போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் அல்லது ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்குவதா என்பது குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd