web log free
September 16, 2024

கஞ்சா செடி வளர்த்த பிரித்தானிய பிரஜை கைது

வீட்டில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய வலய குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்அடிப்படையில் குறித் நபர் கைது யெ்யப்பட்டதுடன், சந்தேக நபரிடம் செல்லுபடியான விசா இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கைது செய்த நபரிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.