web log free
March 29, 2026

ஆளும் அரசாங்கத்தின் 11 கட்சிகள் இன்று தனி மேடையில்

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய காங்கிரஸ், பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி உள்ளிட்ட  11 அரசியல் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 'முழு நாடும் சரியான பாதையில்' என்ற தேசிய விஞ்ஞாபனத்தின் வெளியீடு இன்று மார்ச் 2, 2022 மாலை 3:00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திறந்த பொருளாதார அபிவிருத்தி மாதிரியில் ஏற்பட்டுள்ள மோசமான பின்னடைவின் விளைவுகளை நாம் அனுபவித்து வருவதாகவும், குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதாரத்தின் அடித்தளத்தை நீண்ட கால அடிப்படையில் பலப்படுத்தும் பொருளாதார மாதிரியை உருவாக்க வேண்டும் எனவும் மேற்கண்ட கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொருளாதார வாய்ப்புகளை வழங்கி, பெரும்பான்மை மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். அதை செயற்படுத்த பிரேரணை ஒன்று முன்வைக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

'முழு நாடும் சரியான பாதையில் செல்கிறது' என்ற தேசிய விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு நிகழ்வில் மேற்கண்ட கட்சிகளின் தலைமைப் பங்குபற்றவுள்ளதுடன், சிறந்த அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழுவொன்றும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd