web log free
January 02, 2026

ஜனாதிபதியை வீடு தேடிச் சென்ற மகளிர் படை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணி இன்று ஜனாதிபதி வீடு நோக்கி பேரணி சென்றது.

ஐக்கிய மகளிர் சக்தி தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, உப தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ், செயலாளர் நிருபா, நிரோஷா அத்துக்கோரல மற்றும் உறுப்பினர்கள் பலர் இன்றைய தினம் (05.03.2022) கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இல்லத்திற்கு சென்று கையளித்தனர்.

குறிப்பாக மின்சார தடை, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள் தொடர்பில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd