web log free
August 28, 2025

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடும் - நிமல் சிறிபால டி சில்வா

அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று (10) நடைபெற்ற கட்சியின் கொழும்புல் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற இந்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

”அடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். அது தொடர்பில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். கூட்டமைப்பு அரசியலில் நாம் தனித்துப் போட்டியிட்டு பின்னர் எமது கொள்கையை ஏற்றுக்கொள்ளும் தரப்புடன் கூட்டமைப்பாக இணைந்து கொள்ள முடியும்”

என இதன்போது நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd