web log free
August 28, 2025

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்கும்

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.

புதிய ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றமே நியமிக்க முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd