web log free
October 19, 2025

நாளை 24 மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி

நாளை தினமும் (24) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி 50 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி 20 நிமிடங்களும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd