web log free
May 09, 2025

1500 பஸ்கள் தயார் நிலையில்

இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயாராக உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பை எதிர்நோக்கி மக்களின் போக்குவரத்து தேவைகளுக்காக 1500 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அந்த சபை அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைகத்து ரயில் மற்றும் தனியார் பஸ் சேவையாளர் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd