web log free
June 13, 2026

கொழும்பு பங்குச் பரிவர்த்தனை நிலையத்தின் பரிதாப நிலை

நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது.


அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.


நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 8,903.87 புள்ளிகளாக பதிவாகியுள்ளது


அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 391.02 ஆக இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.


கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டர் மாதம் 24 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Last modified on Thursday, 31 March 2022 12:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd