web log free
April 29, 2025

இலங்கையில் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுத்தம்

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான UL201 மற்றும் UL202 விமானங்களை நிறுத்த முடிவு எட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd