web log free
October 29, 2025

நாட்டின் நிலைமை குறித்து தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட முடிவு

நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மிரிஹான பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான அறிக்கையை பாதுகாப்புப் படையினரிடம் சமர்ப்பித்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, நாட்டின் நிலைமை குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு சபையை கூட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகநூல் மூலம் மிரிஹானவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், துனிசியா, ருமேனியா மற்றும் தாய்லாந்தில் நடந்த போராட்டங்கள் போல சில இடங்களில் இருந்தமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd