web log free
March 29, 2024

பசிலுயுடன் மோதிய மஹிந்தானந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட இறுதி அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இருவரும் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.

இதற்கான கடிதங்களை பிரதமர் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளார்.