web log free
September 16, 2025

ஜனாதிபதியின் அழைப்புக்கு எதிர்க்கட்சிகள் பதில்

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு தேசிய நலனாக இணைந்து செயல்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கொடுத்துள்ள இந்த அழைப்பிற்கு எதிர்க் கட்சிகளிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd