web log free
March 29, 2024

அலி சப்ரி ஏன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார் ? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கேள்வி , அரசில் இருந்து வெளியேறத் தயார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சு பதவிகளை இராஜனாம செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குறைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்

இதில் நாடு இவ்வளவு பாரிய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்கும் போது ஏன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை , அலி சப்ரி ஏன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார், என்பதுதான் இன்று அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள் என அறியமுடிகின்றது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது என அறியமுடிகின்றது .