web log free
October 19, 2025

கப்ரால் இலங்கையை விட்டு வெளியேற தடை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 136(1)(ஏ) பிரிவின் பிரகாரம், தென் மாகாண முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகளுக்கு அமையவே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd