web log free
June 27, 2025

கோட்டா - ரணில் இடையே தனி அறையில் இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் பாராளுமன்ற அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வது மற்றும் அண்டை நாடுகளுடன் பொருளாதார மட்டத்தில் மேற்கொள்ளவுள்ள இராஜதந்திர ஒப்பந்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd