web log free
July 30, 2025

பிரதி சபாநாயகர் பதவியில் மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டி

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (08) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை விடுத்தார்.

பிரதி சபாநாயகராக தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இரண்டு நிபந்தனைகளை முன்வைப்பதாக சியம்பலாபிட்டிய எம்.பி. கூறினார். 

ஏப்ரல் இறுதி வரை மட்டுமே பிரதி சபாநாயகர் பதவியை ஏற்றுக் கொள்வதாகவும், அதுவரை பிரதி சபாநாயகர் பதவிக்கான சலுகைகள் எதனையும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd