web log free
November 05, 2025

கோட்டாவின் நிர்வாகத் திறன் இன்மையே நெருக்கடிக்கு காரணம் - ரணில்

2019 ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்த போது  இலங்கை பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருந்ததாகவும் தாம் பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறும்போது டொலர் போதுமான அளவில் இருந்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எங்களது ஆட்சிக் காலத்தில் இது போன்ற நெருக்கடி (பொருளாதார நெருக்கடி) ஒருபோதும் நடக்கவில்லை. எங்களது ஆட்சி நடைபெற்றபோது அத்தியாவசியத் தேவைகளுக்காக மக்கள் வரிசையில் நிற்கவில்லை என்றும், நிதி சவால்களை கையாள்வதில்  கோட்டாபய ராஜபக்ச அரசின் திறமையின்மையால் தற்போது மக்கள் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை அரசிடம் போதிய வளங்கள் கையிருப்பில் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்றும் கோட்டாபய அரசாங்கம் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களிடம் கடன் வாங்க முயற்சிப்பதாகவும்  இதனால் இலங்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் சீனா புதிய முதலீடுகள் எதையும் செய்யவில்லை என்றும்,  இந்தியா, இலங்கைக்கு அதிகபட்ச உதவிகளை செய்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd