web log free
September 14, 2025

கோட்டாகமவில் அதிரடி காட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று மற்றும் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பல தடவைகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் 1999 இல் சட்டவிரோத மரக்கடத்தலிற்காகவும் 2013 இல் போதைப்பொருள் வைத்திருந்தமைக்காகவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd