web log free
April 29, 2025

கோட்டாவும் மஹிந்தவும் பதவி விலக வேண்டும் - முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறும் புதிய ஜனாதிபதி மற்றும் அமைச்சரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மிகவும் கவலையாக இருப்பதாகவும், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd