web log free
August 26, 2025

ஜனாதிபதி கோட்டாபயவை பதவி நீக்க புது யோசனை முன்வைப்பு

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவினத் தலையீடுகளும் துண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதி ராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிகிறார்.

சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd