web log free
August 26, 2025

ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் - லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தனது கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை (காண்பிக்கும் ) நிரூபிக்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"அடுத்த வாரம் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதை அனைவரும் பார்க்க முடியும், இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நான் வெளிப்படுத்த மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார் மேலும் .

"ஜனாதிபதி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும், பின்னர் அரசாங்கத்தின் தூண்களில் சமநிலையை உறுதிப்படுத்த அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஏன் வித்தியாசமான பாதையில் செல்கிறார் என வினவியதற்கு, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை என வெல்கம தெரிவித்துள்ள போதிலும் அவர் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உடன் இருப்பதா.எவ்வாறாயினும் கடைசியில் அவர் ஐக்கிய மக்கள் சக்தி உடன் தான் வருவார் எனவும் தெரிவித்தார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd