web log free
April 29, 2025

நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக இருப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க தயாராகி வருகிறார்.

அவரது முடிவு திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் கட்சிகளின் பங்களிப்புடன் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தமையே இதற்குக் காரணம்.

அரசாங்கத்தில் புதிய அமைச்சரையும் நியமிக்கும். அந்தச் சூழ்நிலையில் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ஷ நீடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது.

எவ்வாறாயினும், தான் பதவி விலகப் போவதில்லை என்றும், ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd