web log free
May 11, 2025

ஜனாதிபதியின் பயணம் ரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.

எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் இலங்கையிலேயே தங்கியிருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:53
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd