web log free
August 04, 2025

நாட்டில் மீண்டும் பெற்றோல் டீசல் வரிசை

நாடு முழுவதும் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் போக்குவரத்து பௌசர் உரிமையாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையே இதற்கான காரணம்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், எரிபொருளை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ரயில் மூலம் எரிபொருள் போக்குவரத்து 40 சதவீதமாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd