web log free
October 18, 2024

அதிபர் அடித்தார் என்பதற்காக கோபத்தில் பாடசாலைக்கு தீ வைத்த மாணவர்கள்!!

பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்ததாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பாணந்துறை வடக்கு, கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
 
சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
பள்ளியின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலீசார் தெரிவித்தனர்.
 
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.