web log free
September 16, 2024

புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதான அனைவரும் விடுதலை

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 14 பேரும் மூன்று ஆண்டுகளுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களை குற்றமற்றவர்களாக கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், அவர்களை விடுவிக்க மாவனெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது