web log free
May 14, 2026

ஆமர் வீதில் தடியடிக்காக பொல்லுகளுடன் களமிறக்கப்பட்ட பொலிஸார்! செல்ல மறுக்கும் மக்கள் - கொழும்பில் பதற்றம்

ஆமர் வீதி பகுதியில் அனைத்து வீதிகளையும் மறித்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தமக்கு எரிவாயு கிடைக்காவிடின் நாளைய தினம் நடுச்சந்தியில் கூடாரம் அமைத்து வீதிகளை மறித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்போம் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமர் வீதிகுதியில் தற்போது பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பொலிஸார் கைகளில், தடியடி பிரயோகம் மேற்கொள்ளும் பொல்லுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Last modified on Sunday, 08 May 2022 09:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd