web log free
April 20, 2024

நாட்டில் டீசல் துளிகூட இல்லையாம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது டீசல் துளி அளவும் கையிருப்பில் இல்லை என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் பாரிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் டீசல் இறங்கியதும், டீசல் விநியோகம் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

இன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறாது எனவும், வெசாக் விடுமுறை காரணமாக கூட்டுத்தாபன ஊழியர்கள் பணிக்கு வராததே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.