web log free
February 04, 2026

முன்னாள் அமைச்சர்களின் துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த பழுப்பு நிற துப்பாக்கியும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எச்.பி.சேமசிங்கவின் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் விமான நிலைய வீதியிலுள்ள துமிந்த திசாநாயக்க மற்றும் எச்.பி.சேமசிங்க ஆகியோரின் இரு வீடுகள் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டதுடன் அவர்களது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது துமிந்த திஸாநாயக்கவிற்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பிரவுனிங் துப்பாக்கி அவரது வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் எச்.பி.சேமசிங்கவின் வீட்டை சேதப்படுத்த வந்த நபர்கள் வீட்டின் அலமாரியில் இருந்த 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd