web log free
April 23, 2024

காலி முகத்திடல் போராட்டம் குறித்து வெளியான இரகசியம்

ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தள செயற்பாட்டாளரான சஞ்சு சமரசிங்க என்ற மோட்டிவேஷன் அப்பச்சி தெரிவித்துள்ளார்.

இன்று ஆர்பாட்ட வலயத்தில் மக்கள் இல்லை எனவும் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஜே.வி.பியின் தலையீட்டினால் போராட்டம் நீர்த்துப் போனதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.