web log free
May 15, 2026

சுமந்திரனின் பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd