web log free
June 29, 2025

எம்பிக்களுக்கு உணவாக பலா, ஈரபலா, வற்றாளை கிழங்கு! ஜனாதிபதி அறிவிப்பு

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பலா, ஈரபலா, வற்றாளை கிழங்கு போன்ற உணவுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பான காடுகளில் உள்ள பலாப்பழங்களை அறுவடை செய்வதற்காக வனப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிக்க அனுமதிக்கும் அமைச்சரவைப் பிரேரணையை விவசாய அமைச்சர் முன்வைத்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd