web log free
January 30, 2026

நாய், பூனை கடித்தால் சிகிச்சை அளிக்க மருந்து இல்லை

கடுமையான மருந்து தட்டுப்பாடு வடக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தெருநாய்கள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடமாகாண பொது சுகாதார அதிகாரிகள் வடமாகாண மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

நாய்கள் மற்றும் பூனைகளின் கடி மற்றும் சுரண்டலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தக்கூடிய ரேபிஸ் தடுப்பூசிகள் உட்பட மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு இயன்றவரை தடுப்பூசி போடவும், செல்லப்பிராணிகளால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முன்னெப்போதையும் விட கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவேளை, யாழ்.மாவட்டம் உட்பட வடக்கின் பல ஆதார வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால், உரிய மருந்துகளை மருந்தகங்கள் ஊடாக பெற்றுக்கொள்வதில் அதிக செலவு ஏற்பட்டு மக்கள் பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd