web log free
September 29, 2023

CEB தலைவர் ராஜினாமா! புதியவர் பெயர் அறிவிப்பு

 எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ராஜினாமா கடிதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் பிரதித் தலைவராக கடமையாற்றிய நளிந்த இளங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

இந்தியப் பிரதமர் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நாசப்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழுவிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்னர் தலைவரின் அறிக்கையை நிராகரித்தார். பின்னர் அந்த அறிக்கையை வாபஸ் பெறுவதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கோப் குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்தார்.

Last modified on Monday, 13 June 2022 10:43