web log free
April 05, 2026

மருதானையில் விபச்சார விடுதி! 2000 - 5000 ரூபாவிற்கு விற்பனையான 6 பெண்கள் கைது

கொழும்பு மருதானை ஜினானந்த மாவத்தையில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்து 6 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்கள் 2000 ரூபா முதல் 5000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆறு விபச்சாரிகளில் 21 வயதுடைய யுவதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய, பசறை, கம்பளை மற்றும் வடுமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேருடன், லுனுகல மற்றும் கலிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு சந்தேக நபர்கள் உட்பட 8 பேர் மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஐடி தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd