web log free
January 22, 2026

பவித்ராவிற்கு ஏமாற்றம்!

புதிதாக உருவாக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சை பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம்.

இந்த அமைச்சுப் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் புதிய அமைச்சராக பதவியேற்க பவித்ரா வன்னியாராச்சி தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd