web log free
June 29, 2025

பெற்ரோல் வரிசையில் நிற்க வேண்டாம் - அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பெற்ரோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

23ம் திகதி பெட்ரோல் ஏந்திய கப்பல் ஒன்று தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 23ம் திகதிக்குள் இயல்பு நிலை திரும்பும் எனவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாட்டுக்கு கிடைக்கும் பெட்ரோல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும், பெட்ரோல் அத்தியாவசியம் இல்லை என்றால் யாரும் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd