web log free
May 03, 2025

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்ய முடிவு

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை மூன்றில் இரண்டு பங்காக குறைப்பதற்கு கடுமையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தொழில்முறை முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த  அனைத்து தனியார் வாகனங்களுக்கும் இலக்கத் தட்டில் உள்ள கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருள் நிரப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் தற்போதுள்ள வரிசைகளில் மூன்றில் இரண்டு பங்கு குறையும் என்றும் அவர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd