web log free
September 19, 2024

தனியார் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணி

வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் தனியார் துறை ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிறுவனங்களின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுமுறை பயணங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அமைச்சர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக தனியார் துறையினர்  அதிகாரிகளை அலுவலகங்களுக்கு அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை இணைய வழியில் கடமையில் அமர்த்துமாறும் கோருவதாக விஜேசேகர தெரிவித்தார்.