web log free
July 04, 2025

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்தி குத்து

திஸ்ஸமஹாராம, ஜுல்பல்லம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெற்றோல் வரிசையில் மக்கள் குழுமியிருந்த வேளையில், பெற்றோல் வந்தவுடன் மற்றுமொரு வரிசை ஆரம்பிக்கப்பட்டு, பெற்றோல் எடுக்கச் சென்ற போது, ​​முன் வரிசையில் நின்றவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், மோதல் ஏற்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd