web log free
May 10, 2025

மஹியங்கனை விபத்தில் 10 பேர் பலி

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தியதலாவையில் இருந்து திருகோணலை நோக்கி பயணித்த பேந்துடன் வேன் மோதியதில், பேருந்திற்கு வேன் நுழைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் 12 பேர் பயணித்துள்ளனர். வேனில் பயணித்த ஏனைய இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தவிபத்தில் 7 பெரியர்களும் 3 சிறுபிள்ளைகளும் உயிரழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd