web log free
April 16, 2024

ரட்டா, வசந்த உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்

கொழும்பு - கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் கடந்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஊடாக மருதானை பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.