web log free
October 20, 2025

திடீர் சோதனைக்குச் சென்று கரடியிடம் கடிபட்ட பொலிஸ் சார்ஜன்ட்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மர கடத்தல் வியாபாரிகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கரடி கடித்த நிலையில் கடந்த 21ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டுக்குள் இருந்த கரடி ஒன்று திடீரென பொலிஸாரை தாக்கிய போது, ​​பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடி ஒளிந்து கொள்ள முற்பட்ட போது, ​​பொலிஸ் சார்ஜன்டை  கரடி கடித்துள்ளது.

ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் கரடி துரத்தப்பட்ட நிலையில் காயமடைந்த சார்ஜன்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd