web log free
January 24, 2026

எரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் பலி

எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞன் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை மோட்டார் சைக்கிளுக்கான எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் மற்றுமொரு வாகனம் செல்வதற்கு போதிய இடமில்லாத இடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெறுவதற்காக தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd