web log free
September 19, 2024

ரயில் சேவையில் சிக்கல், மக்கள் பெரும் துன்பத்தில்

எரிபொருள் நெருக்கடி காரணமாக, ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வராததால் பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், அசௌகரியத்திற்கு உள்ளான ஏராளமான மக்கள், கோட்டை ரயில் நிலையத்தில் பதற்றமாக நடந்து கொள்கின்றனர்.

அத்தியாவசிய சேவை என குறிப்பிடப்படுவதால் புகையிரத ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என புகையிரத ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நிலவும் சூழ்நிலை காரணமாக ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், என்ஜின் சாரதிகள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.