web log free
September 19, 2024

நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து சேவைகள் நாளை முதல் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிடிபி டிப்போக்கள் ஊடாக பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் ஏற்பாடு செய்திருந்த போதிலும், பிராந்திய டிப்போக்கள் தொடர்ந்தும் மறுத்து தனியார் பஸ்களுக்கான எரிபொருளை மட்டுப்படுத்துவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சிடிபி பஸ்களை அதிகபட்ச அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.