web log free
July 04, 2025

தலைமை பிக்குகளின் ஆசியுடன் சர்வகட்சி அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கள் பதற்றமடைந்துள்ளதால், தலைமை பிக்குகளின் ஆசியுடன் அனைத்துக் கட்சி ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும் என்றார்.

அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருதெனிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd