web log free
April 26, 2024

ஒன்றரை வயது குழந்தையின் உயிரை பறித்த வாளி!

யாழ்.பொன்னாலை பகுதியில் நீராடும் வாளியொன்றுக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று(04) பகல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வாளியினை எட்டிப்பார்க்கும்போதே தவறுதலாக வீழ்ந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.