web log free
April 19, 2024

இளைஞனை வயிற்றில் உதைத்த இராணுவ அதிகாரி சிக்கலில்

குருணாகல யக்கஹாபிட்டிய ஐ. ஓ. சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் போது சீருடையில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை வயிற்றில் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் பரவிவரும் காணொளியில், மோதலின் மத்தியில் வந்த லெப்டினன்ட் கர்னல் அந்த நபரை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் காத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அதிகாரியின் செயலுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாட்களாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெளியாட்கள் வந்து அங்கிருந்து மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும், இடத்தில் பாதுகாப்பில் இருந்த இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அநாகரீகமாக திட்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ அதிகாரி அங்கு வந்து இந்த தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியபோது, ​​இந்த சம்பவத்தில் இராணுவ அதிகாரியின் களம் தொடர்பில் நிறுவன மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்தவர்கள் இராணுவத்தினரை திட்டி தாக்க முற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.